ரேஷன் அரிசி விலை உயர்வு: கோவையில் சாலை மறியல்
கோயம்புத்தூர்:
ரேஷன் அரிசி விலை உயர்த்தப்பட்டதை எதிர்த்து கோயம்புத்தூரில் இன்று (திங்கள்கிழமை) 300க்கும் மேற்பட்டபெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கோயம்புத்தூர்-கோட்டைமேட்டுப் பகுதியில் உள்ள ஒரு ரேஷன் கடையில் அரிசி வாங்குவதற்காக இன்று காலைபெண்கள் வந்தனர்.
ஆனால் 75 கார்டுகளை மட்டும் பெற்றுக் கொண்ட ரேஷன் கடை ஊழியர்கள், இவர்களுக்கு மட்டும் ஒரு கிலோஅரிசி ரூ.3.50 வீதம் வழங்கப்படும் என்று கூறினார்கள்.
மற்ற அனைவருக்கும் புதிய விலை உயர்வின் படி கிலோ ஒன்றுக்கு ரூ.9 வீதம் வழங்கப்படும் என்றும் அவர்கள்தெரிவித்தனர்.
இக்கடையில் மொத்தம் 1,350 ரேஷன் கார்டுகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெண்கள், உடனடியாகச் சாலை மறியலில் ஈடுபட்டனர். பழைய விலைக்குதான்அரிசி வழங்க வேண்டும் என்று கோரி அவர்கள் ஆர்ப்பாட்டமும் செய்தனர்.
இதையடுத்து, போலீஸ் அதிகாரிகள் விரைந்து வந்து அவர்களைச் சமாதானப்படுத்தினர்.
ஆனால், ரேஷன் கடைகளில் பழைய விலைக்கு அரிசி விற்றால்தான் இனி அரிசி வாங்குவோம் என்று கூறிவிட்டு,சாலை மறியலைக் கைவிட்டு சென்றனர்.
மதுரையில்...
ரேஷன் அரிசி விலை உயர்வைக் கண்டித்து மதுரையில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.
நூற்றுக்கணக்கான மக்கள் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
நெல்லையிலும்...
இதேபோல் திருநெல்வேலியிலும் ரேஷன் கடைகளில் அரிசி விலை உயர்த்தப்பட்டதைக் கண்டித்து, 500க்கும்மேற்பட்ட மக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் திரண்டனர்.
இனி எங்களுக்கு இந்தக் கார்டால் பிரயோஜனம் இல்லை என்று கூறி மாவட்ட கலெக்டரிடம் தங்கள் ரேஷன்கார்டுகளைக் கொடுத்துவிட்டுச் சென்றனர்.












Click it and Unblock the Notifications