சாராயக் கடைகளை திறக்க மாட்டோம்: பன்னீர்செல்வம் உறுதி
சென்னை:
எந்த ஒரு சூழ்நிலையிலும் தமிழகத்தில் சாராயக் கடைகளைத் திறக்க மாட்டோம் என்று தமிழக முதல்வர்பன்னீர்செல்வம் இன்று (திங்கள்கிழமை) கூறினார்.
சென்னையில் இன்று நிருபர்களிடம் பன்னீர்செல்வம் கூறியதாவது:
தற்போது தமிழக அரசுக்கு ஏற்பட்டுள்ள கடுமையான நிதி நெருக்கடிக்கு முந்தைய திமுக அரசுதான் காரணம்.
தேவையில்லாமல் ஏராளமான கடன்களை வாங்கியது திமுக அரசு. சுமார் ரூ.4,460 கோடி கடனை திமுக அரசுவிட்டுச் சென்று விட்டது.
இதனால்தான் தற்போது கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டு விட்டது. ஆனால் அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகுபல்வேறு சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு நடவடிக்கையாகத்தான் வேறு வழியில்லாமல் தற்போது கட்டண உயர்வுகளை மக்களிடம் ஏற்றவேண்டிய நிலைக்குத் தமிழக அரசு தள்ளப்பட்டுவிட்டது.
கள்ளச் சாராயத்தைத் தடுப்பது குறித்து அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொள்ளும். ஆனால்எந்தச் சூழ்நிலையிலும் தமிழகத்தில் சாராயக் கடைகள் திறக்கப்படாது என்றார் பன்னீர்செல்வம்.












Click it and Unblock the Notifications