ராமேசுவரம் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
Subscribe to Oneindia Tamil
ராமேசுவரம்:
வரும் 6ம் தேதி ரயில்களைக் குண்டு வைத்துத் தகர்ப்போம் என்று ராமேசுவரம் ரயில் நிலைய மானேஜருக்கு ஒருமிரட்டல் கடிதம் வந்துள்ளது.
அந்தக் கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:
ஆப்கானிஸ்தானை விட்டு அமெரிக்கா வெளியேற வேண்டும். அமெரிக்காவுக்கு இந்தியா ஆதரவளிக்கக் கூடாது.பாபர் மசூதியை மீண்டும் கட்டித் தர வேண்டும்.
இக்கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால், வரும் 6ம் தேதி நாடு முழுவதும் ரயில்களை ஓடவிடமாட்டோம். மீறி ஓட்டினால், வெடிகுண்டு வைத்து ரயில்களையும் ரயில் நிலையங்களையும் தகர்ப்போம்.
பெரிய அளவில் சேதம் ஏற்படுத்தப்படும். இப்படிக்கு, ஜிகாத் கமிட்டி என்று அக்கடிதத்தில் கூறப்பட்டிருந்தது.
இக்கடிதம் எங்கிருந்து வந்தது என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications