சாந்தகுமார் உடல் இன்று தோண்டி எடுப்பு
Subscribe to Oneindia Tamil
கொடைக்கானல்:
கொலை செய்யப்பட்ட ஜீவஜோதியின் கணவர் சாந்தகுமாரின் உடல் இன்றுதான் (செவ்வாய்க்கிழமை) தோண்டிஎடுக்கப்பட உள்ளது.
ஓட்டல் சரவண பவன் அதிபர் ராஜகோபாலின் ஆட்கள் சாந்தகுமாரைக் கொலை செய்து கொடைக்கானல் மலையில்வீசிவிட்டனர்.
கடந்த 31ம் தேதியே இவருடைய உடலைக் கைப்பற்றிய கொடைக்கானல் போலீசார், அதைப் பல்வேறுகோணங்களில் புகைப்படம் எடுத்துவிட்டு, போஸ்ட்மார்ட்டம் செய்த பின் அனாதைப் பிணமாகப் புதைத்துவிட்டனர்.
ஆனால் ராஜகோபாலின் ஆட்கள் வாக்குமூலம் தந்த பிறகுதான் அது சாந்தகுமாரின் உடல் என்பது போலீசாருக்குத்தெரிய வந்தது.
இந்நிலையில் நேற்று அவருடைய உடல் தோண்டி எடுக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால்மதுரையிலிருந்து கொடைக்கானலுக்கு டாக்டர்கள் வந்து சேராத காரணத்தால், இன்றுதான் உடல் தோண்டிஎடுக்கப்பட உள்ளது என்று போலீசார் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications