அரசு மருத்துவமனையில் புறநோயாளிகளுக்கு "நோ" கட்டணம்
சென்னை:
அரசு மருத்துவமனையில் புற நோயாளிகள் கட்டணம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. மாவட்ட தலைமைபொது மருத்துவமனைகளில் மட்டுமே பார்வையாளர்கள் ரூ.5 கட்டணமளிக்க வேண்டும் என்று தமிழகசுகாதாரத்துறை அமைச்சர் செம்மலை அறிவித்தார்.
நேற்று (திங்கள்கிழமை) அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
அரசு மருத்தவமனைகளில் நோயாளிகளை பார்க்க வரும் பார்வையாளர்களுக்கு ரூ.5 கட்டணமாகவசூலிக்கப்படும்.
இந்த உத்தரவு கடந்த 1ம் தேதியிலிருந்து அமலுக்கு வந்துள்ளது. இந்த கட்டணம் பார்வையாளர்களுக்குஒதுக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட நேரத்தில் வசூலிக்கப்படாது.
மேலும் தாலுகா மற்றும் சிறிய அரசு மருத்துவமனைகளில் வசூலிக்கப்படாது. அரசு பொதுமருத்துவமனைகளிலும்,கல்லூரி மருத்துவமனைகளிலும் மட்டுமே வசூலிக்கப்புடும்.
சிறப்பு சிகிச்சை பெறும் புறநோயாளிகளுக்கு மட்டும் ரூ.5 வசூலிக்கப்படும். நோயாளிகளுக்கு துணையாகஇருப்பவருக்கு அட்டண்டர் பாஸ் வழங்கப்படும் என்றார் செம்மலை.