For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆந்திரக் கொள்ளையர்களால் 30 சென்னை மீனவர்கள் கடத்தல்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னை காசிமேட்டைச் சார்ந்த 30 மீனவர்களை ஆந்திரக் கடற்கொள்ளையர்கள் கடத்திச் சென்றுவிட்டனர்.

வட சென்னை மாவட்டம் காசிமேட்டைச் சேர்ந்த 30 மீனவர்கள் 5 படகுகளில் கடந்த 30ம் தேதி கடலில்மீன்பிடிக்கச் சென்றனர். மீன்பிடிக்கச் சென்றவர்கள் இரண்டு நாட்களாகியும் வீடு திரும்பாததால், அப்பகுதியைச்சேர்ந்த மீனவர்கள் போலீசில் புகார் செய்திருந்தனர்.

இந்நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை)போலீசாருக்குக் கிடைத்த தகவலின் படி, அந்த 30 மீனவர்களும் ஆந்திரமாநிலக் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர்கள் மீனவர்களைவிடுவிக்க பணம் கேட்பதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து சென்னை மீனவர் சங்கத் தலைவர்களும், போலீசாரும் அவர்களை மீட்க ஆந்திரா சென்றுள்ளனர்.

தமிழகத்தின் வடபகுதியைச் சேர்ந்தவர்கள் ஆந்திர கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டு துன்புத்தப்படுவதும்,தென் பகுதியைச் சேர்ந்தவர்கள் இலங்கைக் கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுத் துன்புறுத்தப்படுவதும்தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத் தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X