நீதிபதியை விட நான் நீதியை அதிகம் மதிக்கிறேன்: கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

டான்சி மற்றும் பிளசன்ட் ஸ்டே ஹோட்டல் வழக்குகளிலிருந்து ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டது குறித்துதிமுக தலைவர் கருணாநிதி நேரடியான பதிலை சொல்லவில்லை.

நிருபர்கள் அவரிடம் கருத்து கேட்டபோது அவர் கூறியதாவது:

இதுகுறித்துக் கருத்து கூறுவதற்கில்லை. ஒரு நீதிபதி நீதியை மதிப்பதை விட கூடுதலான மரியாதை நீதியின் பால்எனக்குண்டு.

இந்த வழக்கின் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்வது குறித்து திமுக சட்ட நிபுணர்கள் ஆலோசித்துமுடிவு செய்வார்கள்.

நீதி பெற நெடுந்தூரம் போய்த்தான் ஆக வேண்டும். தார்மீக அடிப்படையில் இந்த வழக்கின் தீர்ப்பை எதிர்த்துஉச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு அப்பீல் செய்யுமா என்பது குறித்து நான் பதில் கூற முடியாது.

இதுபோன்ற யூகமான கேள்விக்கு என்னிடம் பதிலை எதிர்பார்க்கக் கூடாது. மேலும், இந்தக் கேள்வியைகேட்டிருக்க வேண்டிய இடம் வேறு என்றார் கருணாநிதி.

திருப்புமுனை தீர்ப்புகள் - வீரமணி:

தமிழக அரசியிலில் திருப்புமுனைகளை ஏற்படுத்தப் போகும் தீர்ப்புகளை உயர் நீதிமன்றம் கொடுத்துள்ளது என்றுதிராவிடர் கழக பொதுச் செயலாளர் கி. வீரமணி கூறியுள்ளார்.

ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டது குறித்து அவர் கருத்துத் தெரிவிக்கையில், நீதி, நியாயம் எப்போதும்தோற்காது என்பதை இந்த தீர்ப்புகள் நிரூபித்துள்ளன. தமிழக அரசியலில் இந்த தீர்ப்புகள் பெரும் திருப்புமுனைகளை ஏற்படுத்தப் போகின்றன என்றார் வீரமணி.

இது இறுதித் தீர்ப்பு அல்ல - ராமதாஸ்:

உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு இறுதியானதல்ல. உச்சநீதிமன்றம்தான் இறுதியான தீர்ப்பை வழங்க வேண்டும்என்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

கோவையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இந்தத் தீர்ப்பை எதிர்த்து யாரேனும் பொதுநலன் மனு தாக்கல் செய்யலாம். எனவே உச்ச நீதிமன்றம் வழங்குவதுதான் இறுதியான தீர்ப்பாக இருக்க முடியும்என்றார் ராமதாஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+