காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
ஸ்ரீநகர்:
காஷ்மீரில் லஸ்கர்-ஏ-தொய்பா இயக்கத்தின் தற்கொலைப் படையைச் சேர்ந்த 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் 2 ராணுவ வீரர்களும் தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஆனால் அனுமதியின்றி தொழிற்சாலைக்குள் நுழைய முற்படும் வண்டிகளை நிறுத்தும் வகையில் அங்கு தடுப்புகள்அமைக்கப்பட்டிருப்பதால், அவர்களது வேன் நின்றுவிட்டது.
இதனால் அந்த வேனில் வந்தவர்கள் வாயிலில் காவலுக்கு நின்றுகொண்டிருந்த வீரர்கள் மீது துப்பாக்கியால்சரமாரியாகச் சுட்டனர். இதில் 2 வீரர்கள் பலத்த காயமடைந்து பிறகு இறந்துவிட்டனர்.
தீவிரவாதிகள் மீது ராணுவத்தினர் நடத்திய பதில் தாக்குதலில் அபு பக்கர், அபு பிட்டர் மற்றும் ஒரு அடையாளம்தெரியாதவன் உட்பட 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இவர்கள் அனைவரும் பாகிஸ்தானில் இருந்து செய்லபடும் லஸ்கர்-ஏ-தொய்பா என்ற தீவிரவாத அமைப்பைச்சேர்ந்தவர்கள் ஆவர்.












Click it and Unblock the Notifications