சென்னையில் லஞ்சம் வாங்கிய போலீஸ் அதிகாரி கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் லஞ்சம் வாங்கியதாக ஒரு போலீஸ் அதிகாரி இன்று (செவ்வாய்க்கிழமை) கைது செய்யப்பட்டார்.
சென்னை மது விலக்குப் பிரிவைச் சேர்ந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன், லஞ்சம் வாங்குவதாக லஞ்சஒழிப்புத் துறைக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அவர் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டார். ரகசியப் போலீசார் அவரைப் பின் தொடர்ந்து சென்றுஅவர் லஞ்சம் வாங்குகிறாரா என்பதைக் கண்காணித்தனர்.
இந்நிலையில், இன்று காலை திருவல்லிக்கேணி பகுதியில் அவர் லஞ்சம் வாங்கிக் கொண்டிருந்தபோது, கையும்களவுமாகப் பிடிபட்டார்.
லஞ்ச ஒழிப்புத் துறையைச் சேர்ந்த போலீசார் அவரைக் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications