இலவச மின்சாரம் ரத்து ஆகாது - பன்னீர் விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும் என்று முதல்வர் பன்னீர் செல்வம் விளக்கம்அளித்துள்ளார்.

நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி மின், பஸ், பால், ரேசன் பொருள்களின் விலையை அரசு உயர்த்தியது.ஆனால், விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரமும், குடிசைகளுக்கு வழங்கப்படும் இலவசமின்சாரமும் தொடரும் என்று அறிவித்தது.

அனைவருமே இலவச மின்சாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். பெரும் வசதிபடைத்த விவசாயிகள் தான் இலவச மின்சாரத்தால் பலனடைந்து வருகின்றனர். சிறிய அளவில் விவசாயம்செய்பவர்களின் நிலங்களில் மோட்டார்களே கிடையாது. அவர்களுக்கு இலவச மின்சாரத்தால் எந்தப் பலனும்இல்லை.

இதை பல தரப்பினரும் சுட்டிக் காட்டி வருவதையடுத்து இந்த இலவச மின்சாரத்தை வசதி படைத்தவிவசாயிகளுக்கு வழங்குவதை ரத்து செய்ய அரசு திட்டமிட்டுள்ளது என்று நேற்று சில தகவல்கள் வெளியாகின.

ஆனால் இதை மறுத்து சென்னையில் நேற்று மாலை பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்கூறியிருப்பதாவது:

பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பொது விநியோகத்தில் வசதி வாரியாகப் பிரிக்கப்பட்டு சலுகைகள்வழங்கப்படுவது போல, விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்திலும், சிறு விவசாயிகளுக்கும், பெரியவிவசாயிகளுக்கும் இடையில் வேறுபாடு காணப்படுமா என்று கேட்கப்பட்டது.

அதற்கு நான், இதுகுறித்து துல்லியமான ஒரு கணக்கெடுப்பை மேற்கொள்ள வேண்டும். இருப்பினும், இதுகுறித்துஇன்னும் பரிசீலிக்கப்படவில்லை என்று பதிலளித்தேன்.

எனவே இதுகுறித்து உண்மைக்கு மாறாக வெளியிடப்படும் தவறான செய்திகளுக்கு விளக்கம் அளிக்கும் வகையில்,வேளாண்துறையைச் சார்ந்த விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்திட்டம் தொடர்ந்துசெயல்படுத்தப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+