For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராஜகோபாலுக்கு போலீஸ் காவல் நீட்டிப்பு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சரவணபவன் அதிபர் ராஜகோபாலை மேலும் 4 நாட்களுக்கு போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம்அனுமதியளித்துள்ளது

ஜீவஜோதியை மூன்றாவது திருமணம் செய்ய முயன்றது தொடர்பாக போலீஸ் ராஜகோபாலை கைது செய்திருந்தது.அவரை போலீசார் ஐந்து நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரித்தனர்.

இந்நிலையில் ஜீவஜோதியின் கணவர் சாந்தகுமார் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதனால் இந்தக்கொலை தொடர்பாக விசாரிப்பதற்காக, ராஜகோபாலை மேலும் ஒரு வாரம் விசாரிக்க வேண்டும் என்றுசைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் நீதிபதி ரவீந்திரனிடம் போலீசார் அனுமதி கேட்டனர்.

நீதிபதி ரவீந்திரன் ராஜகோபாலிடம் மீண்டும் போலீஸ் காவலுக்கு செல்கிறீர்களா என்று கேட்டார். அதற்கு அவர்எனக்கு உடம்பு சரியில்லை. மேலும் போலீசார் என் மீது அபாண்டமாக குற்றம் சாட்டுகிறார்கள் என்றார்.

பிறகு ராஜகோபாலை மீண்டும் 4 நாட்களுக்கு போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி ரவீந்திரன் அனுமதிஅளித்தார். விசாரணைக்குப் பின் அவரை வரும் 7-ம் தேதி நீதி மன்றத்தில் ஆஜர் படுத்த வேண்டும் என்றும்போலீசாருக்கு உத்தரவிட்டார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X