எங்கு கொல்லப்பட்டார் சாந்தகுமார்?

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஹோட்டல் சரவண பவன் அதிபர் ராஜகோபால் மீது புகார் கொடுத்துள்ள ஜீவஜோதியின் கணவர் சாந்தகுமாரைகாரில் வைத்தே கொலை செய்துள்ளதாக சென்னை போலீஸ் கமிஷனர் முத்துக்கருப்பன் கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,

திருநெல்வேலியில் இருந்து ஜீவஜோதியையும், சாந்தகுமாரையும் ராஜகோபாலின் ஆட்கள் தனித்தனி கார்களில்வைத்துக் கொண்டு சென்றுள்ளனர். இதில் சாந்தகுமாரை கொடைக்கானல் நோக்கிக் கொண்டு சென்றனர்.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியைத் தாண்டியதும் சாந்தகுமாரை சரமாரியாக அடித்துள்ளனர். பின்னர் அவரதுகழுத்தை நெரித்துக் கொன்றுள்ளனர். கொடைக்கானல் வந்ததும் அவரது உடலை வெள்ளி நீர்வீழ்ச்சி அருகேமலையிலிருந்து தூக்கி வீசிவிட்டுச் சென்று விட்டனர்.

இந்தக் கொலையை டேனியல் என்பவர் தலைமையிலான அடியாட்கள் கும்பல்தான் செய்துள்ளது.

தற்போது ராஜகோபால் மீதான கடத்தல் வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது என்றார் முத்துக்கருப்பன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+