உச்ச நீதிமன்றம் செல்வேன்: சுவாமி
டெல்லி:
டான்சி வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப் போவதாக ஜனதாக் கட்சித் தலைவர் டாக்டர் சுப்ரமணியன் சுவாமி இன்று (செவ்வாய்க்கிழமை)கூறினார்.
இதுகுறித்து இன்று அவர் டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:
டான்சி வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்னும் ஆழமாக விசாரித்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறுசெய்யாமல் மேலோட்டமாக விசாரணைகளை முடித்து விட்டு, ஜெயலலிதாவை விடுதலை செய்துள்ளது.
உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து நிச்சயமாக மேல் முறையீடு செய்வேன். விரைவில் இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்வேன் என்றார் சுவாமி.
டான்சி மற்றும் கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே ஊழல்களை முதன் முதலில் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்து,ஜெயலலிதாவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவர் சுப்ரமணியன் சுவாமி என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications