டான்சி வழக்கு - ஒரு கண்ணோட்டம்
சென்னை:
கடந்த அதிமுக ஆட்சியின்போது, டான்சி நிறுவனத்துக்குச் சொந்தமான சொத்துக்களை அப்போதைய முதல்வராகஇருந்த ஜெயலலிதா குறைந்த விலைக்கு விற்பதற்கு அனுமதித்தார் என்று குற்றம் சாட்டப்பட்டது.
1996ல் ஆட்சிக்கு வந்த திமுக தனி நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்தது. முதல்வராக இருந்தஜெயலலிதாவுடன் அவருடைய தோழி சசிகலாவும் பங்குதாரராக இருந்த ஜெயா பப்ளிகேஷன்ஸ் மற்றும் சசிஎன்டர்பிரைசஸ் ஆகிய இரு நிறுவனங்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
சென்னை 3வது தனி நீதிமன்ற நீதிபதி பி. அன்பழகன் இந்த வழக்கை விசாரித்தார். அவர் தன்னுடைய தீர்ப்பில்ஜெயலலிதாவுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனையும் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா மேல் முறையீடு செய்ததைத் தொடர்ந்து, அவருக்குஅளிக்கப்பட்ட தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது.
இருந்த போதிலும், ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தண்டனை காரணமாக கடந்த மே மாதம் நடந்த தமிழகசட்டசபைத் தேர்தலில் அவர் போட்டியிட முடியாமல் போனது. ஆனாலும் அதிமுக அமோக வெற்றிபெற்றதையடுத்து, அவர் தமிழக முதல்வரானார்.
இதற்கிடையே டான்சி வழக்கில் தண்டனை பெற்ற ஜெயலலிதா முதல்வராகத் தொடர்ந்து பதவி வகிக்க முடியாதுஎன்று உச்ச நீதிமன்றம் கடந்த செப்டம்பர் 21ம் தேதி தீர்ப்பளித்தது. இதையடுத்து, அவர் முதல்வர் பதவியையும்துறக்க நேரிட்டது.
இந்நிலையில் ஜெயலலிதாவின் மேல் முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதி தினகர், இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஜெயலலிதா உள்பட அனைவரையும் விடுதலை செய்து இன்று தீர்ப்பளித்தது.