அரிசி விலை உயர்வு: திருச்சியில் பெண்கள் சாலை மறியல் - போலீஸ் தடியடி

Subscribe to Oneindia Tamil

திருச்சி:

ரேஷன் அரிசி விலை உயர்வைக் கண்டித்து திருச்சியில் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்கள்கலைந்து செல்லாததையடுத்து, போலீசார் மேற்கொண்ட தடியடியில் பல பெண்கள் காயமடைந்தனர்.

நிதிநெருக்கடியைச் சீர் செய்வதற்காக பஸ் கட்டணம், மின் கட்டணம், பால் விலை, அரிசி விலை போன்றஅத்தியாவசியப் பொருட்மகளின் விலையைத் தமிழக அரசு உயர்த்தியுள்ளது. கடந்த 1ம் தேதி முதல் இந்த விலைஉயர்வு அமலுக்கு வந்துள்ளது.

ஒரு கிலோ அரிசியின் விலை வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ளவர்களுக்கு ரூ.3.50 என்றும் வறுமைக்கோட்டிற்குமேல் உள்ளவர்களுக்கு ரூ.9.00 என்றும் அரசு விலை நிர்ணயம் செய்துள்ளது.

இதை எதிர்த்து நேற்று (திங்கள்கிழமை) கோவை, மதுரை, நெல்லை ஆகிய நகரங்களில் பெண்கள் ஆர்ப்பாட்டம்நடத்தினர்.

இதைத் தொடர்ந்து இன்று திருச்சியிலும் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் நடத்தப்பட்டது.

திருச்சி அருகே உள்ள அரியமங்கலத்தில் இன்று பெண்கள் அனைவரும் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதனால் சாலையில் வெகு நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையடுத்து அப்பகுதி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டிருந்த பெண்களைக் கலைந்துசெல்லும்படி கேட்டுக் கொண்டனர்.

ஆனால் அதற்குப் பெண்கள் மறுக்கவே, போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தினர். இதில் பல பெண்களுக்குகாயம் ஏற்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+