வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
வாக்காளர் பட்டியல் திருத்தும் பணியை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்க மாநில தேர்தல் ஆணையம் முடிவுசெய்துள்ளது.
வாக்காளர் பட்டியலைத் திருத்தும் பணியை மாநில தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. கடந்த நவம்பர் 5ம்தேதி ஆரம்பித்த இப்பணி இன்றுடன் முடிவடைவதாக இருந்தது.
ஆனால் தற்போது இந்தப் பணிகள் முழுமையாக முடிவுறும் நிலையில் இல்லாத காரணத்தால் மேலும் ஒருவாரத்திற்கு இப்பணி நீட்டிக்கப்பட்டுள்ளது.
எனவே இந்த ஒரு வாரத்திற்குள் பட்டியலில் பெயர் இடம் பெறாதவர்கள், பெயரை நீக்க விரும்புபவர்கள் அந்தப்பணிகளை செய்து கொள்ளலாம் என்று மாநில தேர்தல் கமிஷன் கூறியுள்ளது.
சென்னையில் மட்டும் 90 சதவீத பணிகள்தான் முடிவடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications