For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அன்புத் தொல்லையில் ஜெயா

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

அதிமுகவின் அடிமட்டத் தொண்டர்கள் முதல் தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் வரை உடனடியாக முதல்வர்பதவியை ஏற்குமாறு ஜெயலலிதாவிடம் அன்புத் தொல்லை கொடுத்து வருகின்றனர்.

ஆனால் தேர்தலுக்கு முன்பே முதல்வர் பதவியில் அமருவதற்கு ஜெயலலிதா யோசித்து வருவதாக கூறப்படுகிறது.

வழக்குகள் முடிந்து விட்டதால் ஜெயலலிதா உற்சாகமாக இருக்கிறார். அவரைச் சந்தித்து வாழ்த்துக் கூற போயஸ்தோட்டம் வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.

இந்த நிலையில் முதல்வர் பதவியை எப்போது ஏற்பது என்பது குறித்து ஜெயலலிதா தீவிரஆலோசனையில்ஈடுபட்டுள்ளார்.

முதல்வர் பன்னீர் செல்வம், அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்டோருடன் அவர் புதன்கிழமை காலை முதல்தீவிர ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது உடனடியாக முதல்வர் பதவியை ஏற்குமாறு பன்னீர்செல்வம்உள்ளிட்ட அனைவரும் கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.

இருப்பினும் தேர்தலில் நற்காமல் முதல்வர் பதவியில் அமர தனக்கு விருப்பமில்லை என்று ஜெயலலிதாஅவர்களிடம் தெரிவித்ததாகத் தெரிகிறது.

உடனடியாக முதல்வர் பதவியில் அமர்ந்தால் அதனால் மக்கள் மத்தியில் தான் பதவிக்காக அவசரப்படுவதாகஎண்ணம் எழுந்து விடும் என்று நினைக்கிறாராம் ஜெயலலிதா.

மேலும், தனது அரசியல் எதிரிகளின் முகத்தில் கரியைப் பூசும் விதமாக தேர்தலில் நின்று ஜெயித்த பிறகேமுதல்வராக பதவியேற்க ஜெயலலிதா விருப்பப்படுகிறார்.

ஆனால் ஜெயலலிதாவை சந்திக்கும் ஒவ்வொருவரும் உடனடியாக ஜெயலலிதா முதல்வராக வேண்டும் என்றுவலியுறுத்தி வருகின்றனர். அவர்களின் அன்புத் தொல்லையைத் தவிர்க்க முடியாமல் தர்ம சங்கடத்தில் உள்ளார்ஜெயலலிதா.

ஜெயலலிதா முதல்வராவதற்கு எந்தவிதமான தடையில்லை என்று சட்ட நிபுணர்களும் கூறிவிட்டனர். எனவேவிரைவில் இதுகுறித்து ஜெயலலிதா முடிவு ஒன்றை எடுப்பார் என்று தெரிகிறது.

இந்த நிலையில் இன்று (புதன்கிழமை) மாலை தமிழக தற்காலிக ஆளுநர் ரங்கராஜன் சென்னை வருகிறார். அவரைஜெயலலிதா சந்திக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X