For Daily Alerts
Just In
இலங்கை கடற்படையிடமிருந்து தமிழக மீனவர்களைக் காக்க புதிய திட்டம்
சென்னை:
இலங்கைக் கடற்படையினரால் அடிக்கடி தமிழக மீனவர்களின் படகுகள் தாக்கப்படுவதைத் தவிர்க்கும் வகையில்தமிழக மீனவர்களின் படகுகள் அனைத்திற்கும் ஒரே வண்ணம் பூசத் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
தூத்துக்குடி, -நாகப்பட்டனம், ராமேஸ்வரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கைகடற்படை வீரர்கள் அடிக்கடி தாக்குவதும், அதனால் தமிழக மீனவர்கள் உயி-ரிழப்பதும் அடிக்கடி -நடக்கும்சம்பவங்களாகி விட்டன.
இதைத் தடுக்க புதிய திட்டம் ஒன்றை தமிழக அரசு தீட்டியுள்ளது. இந்த மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர் படகுகள்அனைத்திற்கும் ஒரே வண்ணம் பூச தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
மொத்தம் 8000 படகுகளுக்கு வண்ணம் பூச ரூ.42 லட்சத்து 500 -நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணிவிரைவில் துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Story first published: Thursday, May 24, 2001, 5:30 [IST]