For Daily Alerts
Just In
மீதி உள்ள வழக்குகள்
சென்னை:
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீது இன்னும் 6 வழக்குகள் நடந்து வருகின்றன.
திமுக ஆட்சிக்காலத்தில் ஜெயலலிதா மீது பல வழக்குகள் போடப்பட்டன. அவற்றில் நான்கு வழக்குகளிலிருந்துஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டுள்ளார். இன்னும் 6 வழக்குகள் பாக்கியுள்ளன. அவை இன்னும் தனி நீதிமன்றவிசாரணையில் உள்ளன.
ஜெயலலிதா முதன் முதலாக பஞ்சாயத்துக்களுக்கு கலர் டிவி வாங்கியதில் ஊழல், நிலக்கரி இறக்குமதி ஊழல்வழக்குகளில் தனி நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது.
ஆனால் நிலக்கரி இறக்குமதி ஊழல் வழக்கை மீண்டும் விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் அதுமீண்டும் விசாக்கப்பட்டு வருகிறது. இது தவிர மேலும் 5 வழக்குகள் அவர் மீது நிலுவையில் உள்ளன.
ஆக மொத்தம் ஜெயலலிதாவுக்கு எதிராக இன்னும் 6 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவை:
- நிலக்கரி இறக்குமதி ஊழல் வழக்கு
- வருமானத்திற்கு மீறி சொத்து சேர்த்த வழக்கு
- ஸ்பிக் பங்கு ஊழல்
- லண்டனில் ஹோட்டல் வாங்கியதில் நடந்த முறைகேடு தொடர்பான வழக்கு
- அமெரிக்காவிலிருந்து 3 லட்சம் டாலர் அன்பளிப்பு வந்தது தொடர்பான வழக்கு
- மீனா அட்வர்டைசர்ஸ் வழக்கு
Comments
Story first published: Thursday, May 24, 2001, 5:30 [IST]