சென்னையில் பிரம்மாண்ட கடை அமைத்து ரூ.1 கோடி மதிப்பு பொருட்கள் மோசடி
சென்னை:
சென்னையில் பிரம்மாண்டமான கடை ஒன்றை அமைத்த சில வட நாட்டினர் ரூ.1 கோடி மதிப்புள்ளபொருட்களுடன் தலைமறைவாகினர்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் ஒரு வணிக வளாகத்தில் சில நாட்களுக்கு முன் வட இந்தியாவைச் சேர்ந்த சிலர்பெரிய கடை ஒன்றைத் திறந்தனர்.
இந்தக் கடைக்கு மொத்தம் 11 பார்ட்னர்களாம். ஜோஷி என்பவர்தான் இவர்களுக்குத் தலைவராம்.
பெரிய கடையாகத் திறந்திருக்கிறார்களே என்று இக்கடைக்கு பலர் முன் பணம் வாங்காமலேயே ஏகப்பட்டபொருட்களை விநியோத்துள்ளனர்.
இதற்கிடையே இக்கடையில் விற்பனை நிபுணர்கள் வேலைக்காக விண்ணப்பம் கோரி செய்தித் தாள்களிலும்விளம்பரம் வெளியாகியது. தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.7,500 மாதச் சம்பளம் வழங்கப்படும் என்றும்கூறப்பட்டது.
இதை நம்பி ஏராளமான இளைஞர்கள் இங்கு வந்து நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டு, சிலர் வேலைக்கும்சேர்ந்து விட்டனர். ஆனால் கடந்த இரண்டு மாதங்களாக இவர்களுக்குச் சம்பளம் கொடுக்காமல் கடை முதலாளிகள்(அந்த 11 பார்ட்னர்கள்தான்) இழுத்தடித்தனர்.
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்காளாக அந்தக் கடை பூட்டியே கிடந்தது. சந்தேகமடைந்த சிலர் போலீசாருக்குத்தகவல் கொடுத்தனர்.
போலீசார் முன்னிலையில் கடையின் பூட்டு உடைக்கப்பட்டது. கடைக்குள் நுழைந்த போலீசாரும் மற்றவர்களும்பெரும் அதிர்ச்சியடைந்தனர். ஏனென்றால், அங்கு ஒரு பொருள் கூட இல்லை.
இரவோடு இரவாக பொருட்களையெல்லாம் அள்ளிக் கொண்டு, ஜோஷி உள்பட 11 பார்ட்னர்களும்தலைமறைவாகி விட்டனர். இக்கடையில் வேலை பார்த்த இளைஞர்களும், முன் பணம் பெறாமல் பொருட்களைஅள்ளிக் கொடுத்தவர்களும் பரிதாபமாக முழித்துக் கொண்டிருக்கின்றனர்.
தலைமறைவான 11 பேருக்கும் போலீசார் வலை விரித்துள்ளனர்.