சென்னை வருகிறார் ஆளுநர்
சென்னை:
தமிழக ஆளுநர் பொறுப்பையும் கூடுதலாகக் கவனித்து வரும் டாக்டர் சி. ரங்கராஜன் இன்று (புதன்கிழமை) இரவுசென்னை வருகிறார்.
டான்சி மற்றும் பிளசன்ட் ஸ்டே ஓட்டல் வழக்குகளில் ஜெயலலிதா விடுதலையானதைத் தொடர்ந்து, அவர் மீண்டும்தமிழக முதல்வராகப் பதவி ஏற்கலாம் என்ற கருத்து நிலவி வருகிறது.
அப்படி ஒரு நிலை ஏற்பட்டால், தமிழக அமைச்சரவை உடனடியாகக் கூடி, இதற்கான தீர்மானத்தை எடுக்கவேண்டும். பின்னர் அந்த முடிவை ஆளுநரிடம் முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவிக்க வேண்டும்.
ஆளுநர் அதை ஏற்றுக் கொண்டு, புதிய அமைச்சரவையைப் பதவி ஏற்கும் படி அழைப்பு விடுப்பார்.
ஆனால் முறைப்படி எம்.எல்.ஏ. ஆன பிறகுதான் முதல்வர் பதவியை ஏற்கப் போவதாக ஜெயலலிதா நேற்று முடிவுசெய்துள்ளார். ஆனாலும் தற்போதுள்ள சூழ்நிலையில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று தெரிகிறது.
இதுகுறித்து உரிய நேரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜெயலலிதா கூறியுள்ளார்.
மேலும், உடனடியாக முதல்வர் பதவியை ஏற்கலாமா என்பது குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து வருகிறார்ஜெயலலிதா.
இந்நிலையில், இன்று இரவு ஐதராபாத்தில் இருந்து சென்னை வருகிறார் ஆளுநர் ரங்கராஜன்.












Click it and Unblock the Notifications