பந்த் அன்று பஸ்-ரயில் ஓடும்: அரசு அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ள முழு அடைப்பு தினத்தன்று (டிச.7, வெள்ளிக்கிழமை) வழக்கம் போல பஸ்கள்,ரயில்கள் ஓடும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து மாநில உள்துறை செயலாளர் நரேஷ் குப்தா செய்தியாளர்களிடம் பேசுகையில்,
அரசு அலுவலகங்கள், வர்த்தக நிறுவனங்கள் வழக்கம் போல இயங்கும். பஸ், ரயில்கள் வழக்கம் போல ஓடும்.பள்ளிகளும், கல்லூரிகளும் இயங்கும். அசம்பாவிதச் சம்பவங்கள் ஏதும் நடைபெறாத வகையில் பாதுகாப்புகொடுக்கப்படும்.
டிசம்பர் 6ம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினமாதலால், அன்றைய தினம் மாநிலம் முழுவதிலும் போலீசார் அதிகபட்சஉஷார் நிலையில் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வர் என்றார் நரேஷ் குப்தா..












Click it and Unblock the Notifications