விஷச்சாராய சாவு: இறந்தவர் குடும்பத்திற்கு ரூ.500 உதவி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே விஷச்சாராயம் குடித்து இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.500நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கச்சாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கடலூரில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், இறந்தவர்கள் குடும்பத்திற்கு அரசு சார்பில் தலாரூ.500 கொடுக்கப்பட்டுள்ளது.
விஷச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்ட 86 பேர் தற்போது கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இவர்களில் கண் மற்றும் மூளை பாதிக்கப்பட்டவர்கள் சென்னை அரசு மருத்துவமனைக்குமாற்றப்பட்டுள்ளனர்.
விஷச்சாராயம் விற்றது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications