பிளசன்ட் ஸ்டே வழக்கு - தீர்ப்பு விவரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே ஓட்டல் கட்ட விதிவிலக்கு அளித்ததன் மூலம், குற்றம் சாட்டப்பட்டவர்கள் எந்தசுயலாபமும் அடையவில்லை என்று நீதிபதி தினகர் தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

நீதிபதி ஜெயலலிதா உட்பட தனிநீதிமன்றத்தால் தண்டனை வழங்கப்பட்டவர்கள் அனைவரும் நிரபராதி என்றுதனது தீர்ப்பில் கூறியிருப்பதாவது:

பிளசன்ட் ஸ்டே ஓட்டல் கட்ட விதிவிலக்கு கோரியதைப் போல பல அப்பீல்கள் நிலுவையில் இருந்தததால்,விதிவிலக்களித்து அரசாணை பிறப்பிக்கப் பட்டதாக அப்போதைய தலைமைச் செயலாளர் வெங்கட்ராமன்கூறியுள்ளார்.

ஓட்டல் கட்ட விதிவிலக்களித்து அரசாணை பிறப்பதற்கு முன், முன்னாள் நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறைசெயலாளர் சிரியாக் ஆட்சேபங்ம தெரிவித்து குறிப்பு எழுதியிருந்தார் என்றும் அந்தக் குறிப்பு காணாமல்போய்விட்டது என்றும் கூறப்படும் கதைகளை நம்ப முடியவில்லை.

மேலும் அந்த அதிகாரி பணிமாற்றம் செய்யப்பட்டது, குற்றச்சதியைக் காட்டுகிறது என்ற வாதத்தை என்னால் ஏற்கமுடியவில்லை. ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ், சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை.

ஜெயலலிதா, செல்வகணபதி ஆகியோரின் தூண்டுதலின் பேரில்தான் விதிவிலக்கு அரசாணைபிறப்பிக்கப்பட்டுள்ளது என்று தனிநீதிமன்ற நீதிபதி தவறாகக் கருதியுள்ளார்.

விதிவிலக்கு அளித்து அளித்து அரசாணை பிறப்பித்ததன் மூலம், குற்றம்சாட்டப்பட்டுள்ளவர்கள் எந்த சுயலாபமும்அடையவில்லை என் வழக்கை விசாரித்த புலன் விசாரணை அதிகாரி கூறியுள்ளார்.

மேலும் சட்டசபையில் மொத்த ஆதரவோடு அரசாணை பிறப்பிக்கப்பட்டாலும், அதில் பொதுநலன் இல்லை என்றுதனிநீதிபதி கூறியிருப்பது அவரது வரம்பை மீறிய கூற்று.

இவ்வாறு நீதிபதி தினகர் தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+