தூத்துக்குடி அருகே லாரி கவிழ்ந்து 3 பேர் பலி
தூத்துக்குடி:
தூத்துக்குடி அருகே லாரி தலைகீழாகக் கவிழ்ந்ததில் 3 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
கருங்கல் ஜல்லி ஏற்றிய லாரி ஒன்று நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு தூத்துக்குடியிலிருந்து திருச்செந்தூர்நோக்கிச் சென்று கொண்டிருந்தது.
லாரியில் ஏற்றப்பட்ட ஜல்லியின் மேல் அடைக்கலாபுரத்தைச் சேர்ந்த ஒன்பது கூலித் தொழிலாளர்கள்அமர்ந்திருந்தனர்.
மங்களகுறிச்சி அருகே இந்த லாரி வந்து கொண்டிருந்தபோது, திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து சாலையைவிட்டு விலகி அருகே இருந்த பள்ளத்தில் தலைகீழாகக் கவிழ்ந்தது.
இதனால் ஜல்லியின் மேல் அமர்ந்திருந்த ஒன்பது பேரும் பலத்த காயமடைந்தனர். ஆனாலும் மீட்கப்பட்டபோது,அதில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே இறந்து போனது தெரிய வந்தது.
காயமடைந்த மற்ற அனைவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவ்விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications