கட்டண, விலை உயர்வுகள்: தமிழகம் முழுவதும் பாமக போராட்டம்
சென்னை:
கட்டண மற்றும் விலைவாசி உயர்வுகளைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் இன்று(புதன்கிழமை) கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
நிதி நெருக்கடியைச் சீர்செய்வதற்காக பஸ் கட்டணம், மின் கட்டணம், அரிசி விலை, பால் விலை உள்ளிட்டஅத்தியாவசியப் பொருட்களின் விலையை தமிழக அரசு உயர்த்தியுள்ளது. இந்த விலையேற்றம் கடந்த 1ம் தேதிமுதல் அமலுக்கு வந்துள்ளது.
இதற்கு எதிர்க்கட்சிகள் அனைத்தும் எதிர்ப்புத் தெரிவித்து, ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றன. வரும் 7ம் தேதிஎதிர்க்கட்சிகள் தமிழகத்தில் பந்த் நடத்தவுள்ளன.
இந்நிலையில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும்,மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
சென்னையில் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி தலைமையில், பாரிமுனையிலிருந்து மாவட்டக் கலெக்டர் அலுவலகம்வரை பாமகவினர் ஊர்வலமாகச் சென்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் அனவைரும் அதிமுக அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
செங்கல்பட்டு எம்.பியான ஏ.கே. மூர்த்தி உள்ளிட்ட பாமக தொண்டர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
உடனடியாக அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு குறைக்கப்படாவிட்டால் போராட்டத்தைதீவிரப்படுத்தப் போவதாக மணி அப்போது தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications