பொடோ: அனைத்துக் கட்சி கூட்டம் தோல்வி
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
பொடோ சட்டம் தொடர்பாக பிரதமர் வாஜ்பாய் தலைமையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடந்த அனைத்துக்கட்சி கூட்டம் தோல்வியில் முடிவடைந்தது.
எனவே இதில் ஒருமித்த கருத்து ஏற்படுத்துவதற்காக பிரதமர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நேற்று மாலைகூட்டினார். 23 அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
ஆனால், சுமார் இரண்டு மணி நேரம் நடந்த இந்தக் கூட்டத்தில் பொதுவான முடிவு எதுவும் எடுக்கப்படாததால்,பிரதமரின் முயற்சி தோல்வியில் முடிந்தது.
ஆனாலும், மத்திய அரசு பொடோ சட்டத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வது என்று முடிவெடுத்து விட்டது.
வரும் 7ம் தேதி ஜப்பான் செல்லும் வாஜ்பாய் திரும்பிய பிறகு, 11ம் தேதி நாடாளுமன்றத்தில் பொடோ சட்டம்தாக்கல் செய்யப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications