பஸ், மின்சாரக் கட்டணம் கொஞ்சம் குறைப்பு
சென்னை:
சமீபத்தில் உயர்த்தப்பட்ட பஸ், மின்சாரக் கட்டணத்தை தமிழக அரசு சிறிதளவு குறைத்துள்ளது.
இந்தக் கட்டணக் குறைப்பு நாளை (வியாழக்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது.
ரேஷன் பொருள்களின் விலையும் குறைக்கப்படுகிறது.
இது குறித்து தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் கூறுகையில்,
இன்று கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. முன்னதாக விலையையும்கட்டணங்களையும் உயர்த்தியதால் அரசுக்கு சுமார் ரூ. 3,070 கோடி அளவுக்கு கூடுதல் வருவாய்க்கு வழிசெய்யப்பட்டது. இப்போது இதில் சுமார் ரூ. 1162.39 கோடி அளவுக்கு விலைகளையும் கட்டணங்களையும்குறைக்க உள்ளோம்.
இதனால், அரசுக்கு ரூ. 1907.61 கோடி மட்டுமே கூடுதலாகக் கிடைக்கும்.
விலை உயர்வைக் குறைத்துள்ளதால் நாளை மறுநாள் பந்த் நடத்தும் திட்டத்தை எதிர்க் கட்சிகள் கைவிடவேண்டும். அப்படியே பந்த் நடந்தாலும் மக்கள் அதை ஆதரிக்க மாட்டார்கள் என்றார் பன்னீர்.












Click it and Unblock the Notifications