For Daily Alerts
Just In
நக்கீரன் நிருபர் கைது: அறிக்கை அனுப்பியது கர்நாடக அரசு
சென்னை:
நக்கீரன் நிருபர் சிவசுப்ரமணியம் கைது தொடர்பாக தமிழக அரசுக்கு கர்நாடக அரசு அறிக்கை ஒன்றைஅனுப்பியுள்ளது.
இதுகுறித்து தமிழக உள்துறை செயலாளர் இன்று (புதன்கிழமை) நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழக அரசுக்கு கர்நாடக அரசு அனுப்பியுள்ள அறிக்கையில், சில மின்னணு பொருட்களுடன் காட்டுக்குள்சிவசுப்ரமணியம் நுழைய முயன்றதாகவும், அப்போதுதான் அவரை கர்நாடகப் போலீசார் கைது செய்தனர் என்றுகூறப்பட்டுள்ளது.
மேலும் ஏதோ ஒரு சதித் திட்டத்துடன்தான் சிவசுப்பிரமணியம் காட்டுக்குள் நுழைந்ததாகவும் தெரிய வந்துள்ளதாகஅவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார் நரேஷ் குப்தா.
Comments
Story first published: Thursday, May 24, 2001, 5:30 [IST]