25 வழக்குகளில் தொடர்புடைய திருடன் அதிரடி கைது
சென்னை:
போலீசாரின் பிடியில் சிக்காமல் தலைமறைவாக இருந்து வந்த பலே திருடனை போலீசார் மடக்கிப் பிடித்துள்ளனர்.
செங்கை கிழக்கு மாவட்டம் சங்கர் நகரைச் சேர்ந்தவர் காட்டுப்பூச்சி. இவர் மீது செங்கை கிழக்கு, காஞ்சிபுரம் ஆகியமாவட்டங்களில் கொள்ளை, வழிப்பறி, பிக் பாக்கெட் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.
கொள்ளையில் பல வருட அனுபவம் நிறைந்த காட்டுப்பூச்சியை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு போலீசார் கைதுசெய்தனர்.
கைது செய்யப்பட்ட காட்டுப்பூச்சியை ஒரு வழக்கு தொடர்பாக காஞ்சிபுரம் நீதிமன்றத்திற்கு அழைத்துச்சென்றபோது போலீசாரை ஏமாற்றி விட்டு எஸ்கேப் ஆனார் காட்டுப்பூச்சி. அதற்குப் பிறகு அவர் எங்குமேசிக்கவில்லை.
இதன் பிறகு, சங்கர் நகர் திருட்டில் ஈடுபட முயன்ற காட்டுப்பூச்சியை போலீசார் பிடித்தனர். அவரை தாம்பரம்கோர்ட்டிற்கு கொண்டு சென்றனர். அப்போதும் வழக்கம் போலவே போலீசாரை ஏமாற்றி விட்டு தப்பினார்காட்டுப்பூச்சி.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை சங்கர் நகர் பகுதியில் சாலையில் சென்ற பெண்களிடம் காட்டுப்பூச்சி தகராறுசெய்து கொண்டிருப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து பெரும் போலீஸ் படையே அங்கே விரைந்தது. இந்த முறை காட்டுப்பூச்சியை தப்ப விடக் கூடாதுஎன்ற உறுதியுடன் வந்த போலீசார், குடி போதையில் பெண்களிடம் வம்பு செய்து கொண்டிருந்த காட்டுப்பூச்சியைமடக்கிப் பிடித்தனர்.












Click it and Unblock the Notifications