பிளசன்ட் ஸ்டே வழக்கு: தீர்ப்பு நகல் கேட்டு உயர் நீதிமன்றத்தில் மனு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே ஓட்டல் வழக்கில் ஜெயலலிதா விடுவிக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில்மேல் முறையீடு செய்வதற்காக, தீர்ப்பின் நகலைக் கேட்டு அந்த வழக்கில் அரசு தரப்பில் தனிநீதிமன்றத்தில்வாதாடிய வழக்கறிஞர் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, முன்னாள் அமைச்சர் செல்வகணபதி உட்பட, 5 பேருக்கு கொடைக்கானல்பிளசன்ட் ஸ்டே வழக்கில் தனி நீதிமன்றம் வழங்கிய தண்டனை செல்லாது என்று கூறி, அவர்கள் 5 பேரையும்நிரபராதி என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்நிலையில் இந்த வழக்கில் தனிநீதிமன்றத்தில் அரசு தரப்பில் ஆஜராகி வாதாடிய வழக்கறிஞர் ராமசாமி,உயர்நீதிமன்றம் தற்போது அளித்துள்ள தீர்ப்பின் நகலைக் கேட்டு, மனுத் தாக்கல் செய்துள்ளார். அவர் தனதுமனுவில் கூறியிருப்பதாவது:

உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பில் பொது முக்கியத்துவம் வாய்ந்த, பொது நெறிமுறைகள் குறித்த பலகேள்விகள் எழுந்துள்ளன.

இந்நிலையில், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ஜெயலலிதா தான் தற்போது மாநில அரசைக்கட்டுப்படுத்துகிறார். இதனால், தமிழக அரசு சார்பில் இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடுசெய்யப்படாது.

எனவே, பொதுநலன் கருதி இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய, எனக்கு தீர்ப்பின் நகல்கள்தேவைப்படுகின்றன. எனவே தீர்ப்பின் நகலை எனக்கு வழங்குமாறு உயர் நீதிமன்ற பதிவுத்துறைக்கு உத்தரவிடக்கோருகிறேன் என்று ராமசாமி அம்மனுவில் கோரியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+