For Daily Alerts
Just In
அரசு ஊழியர்களுக்கும் மீண்டும் சலுகை
சென்னை:
அரசு ஊழியர்கள் முன்பிருந்த படியே 6 மாத இடைவெளியில் வைப்பு நிதியிலிருந்து முன்பணம் பெறலாம் என்றுதமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் நேற்று பேட்டியளிக்கையில் கூறியதாவது:
தமிழக அரசு ஊழியர்களுக்கு வைப்பு நிதியிலிருந்து முன் பணம் எடுப்பதற்கான கால இடைவெளி 6 மாதம்என்றதிலிருந்து 12 மாதமாக குறைக்கப்பட்டது.
இதனால் அரசு ஊழியர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் அவர்களது நியாயமான கோரிக்கையை ஏற்கவேண்டும்என்றும் தமிழக அரசுக்கு ஜெயலலிதா ஆலோசனை வழங்கினார்.
இது குறித்து தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை செய்து, மீண்டும் பழைய முறையிலேயே 6 மாதஇடைவெளிக்குள் முன்பணம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு இன்று முதல் நடைமுறைக்கு வருவதாக பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
Comments
Story first published: Thursday, May 24, 2001, 5:30 [IST]