For Daily Alerts
Just In
ஆண்டிப்பட்டி தேர்தலுக்காகத் தான் இந்த விலை குறைப்பு: கருணாநிதி
சென்னை:
ஆண்டிப்பட்டி தேர்தலில் வெற்றி அடைவதற்காகவே விலை குறைக்கப்பட்டுள்ளது என்று கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார்.
நேற்று(புதன் கிழமை) மாலை நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:
உ.யர்நீதிமன்ற தீர்ப்பையொட்டி ஜெயலலிதா தேர்தலில் நிற்பது உறுதியாகிவிட்டது. ஆண்டிப்பட்டியில் நிற்கப்போவதாக அவரே கூறியுள்ளார். அவர் வெற்றியடைவதற்காகவே விலை குறைப்பு என்ற இந்த கண்துடைப்புநாடகம்.
அடுத்த ஆண்டு மே 1ம் தேதி வரைதான் இந்த விலைக்கு அரிசி விற்கப்படும், அதற்கு பிறகு வறுமைக்கோட்டிற்குகீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே ரூ.3.50 விலைக்கு அரிசி வழங்குவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதிலிருந்தே இது வெறும் கண் துடைப்பு நாடகம் என்று தெரிகிறது. இதனால் நாங்கள் நடத்தும் பந்த் எந்தவிதத்திலும் பாதிப்படையாது என்றார் கருணாநிதி.
Comments
Story first published: Thursday, May 24, 2001, 5:30 [IST]