முல்லா ஒமர் சரணடைய முடிவு: அமெரிக்கா தகவல்
இஸ்லாமாபாத்:
காண்டஹார் நகரில் சுற்றி வளைக்கப்பட்டுள்ள தலிபான்களின் தலைவர் முல்லா முகம்மது ஒமர் அந்த நகரைநார்த்தர்ன் அலையன்ஸ் படையினரிடம் ஒப்படைத்துவிட்டு சரணடைய முன்வந்துள்ளார்.
தலிபான்கள் வசம் இருக்கும் கடைசி நகரம் காண்டஹார் தான். இதை ஒப்படைத்துவிட்டால் தலிபான்களின்கட்டுப்பாட்டில் ஆப்கானிஸ்தானின் எந்தப் பகுதியும் இருக்காது.
இந்த நகரை பழங்குடி இனத்தைச் சேர்ந்த படையினரும் நார்த்தர்ன் அலையன்ஸ் படைகளும் சுற்றிவளைத்துள்ளனர். இங்குள்ள தலிபான் படையினரும் அல்-காய்தா தீவிரவாதிகளும் பதிலடித் தாக்குதல் நடத்திவந்தனர்.
ஆனால், அமெரிக்க விமானங்கள் கொடுத்த பலத்த அடியை அவர்களால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. தலிபான்படைகள் சிதறி ஓடி வருகின்றன.
இதையடுத்து இந்த நகரை ஒப்படைத்துவிட முல்லா உமர் முன் வந்துள்ளார். அவரது மூத்த தளபதிகள்சரணடையவும் முன்வந்துள்ளனர். இது குறித்து தங்களுடன் அவர்கள் சமாதானப் பேச்சுவார்த்தையில்ஈடுபட்டுள்ளாக நார்த்தர்ன் அலையன்ஸ் படைத் தளபதிகள் கூறினர்.
அதே போல முல்லா உமரும் சரணடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து இடைக்கால அரசின் பிரதமர்ஹமித் கர்சாயுடன் அவர் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார் என அமெரிக்கப் படைளின் செய்தித் தொடர்பாளர்கென்டன் கெய்த் கூறினார்.












Click it and Unblock the Notifications