For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாபர் மசூதி இடிப்பு விவகாரம்: மக்களவை ஒத்திவைப்பு

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

பாபர் மசூதி இடிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக இன்று (வியாழக்கிழமை) எதிர்க்கட்சிகள் பெரும் அமளியில்ஈடுபட்டதைத் தொடர்ந்து இன்று முழுவதும் மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.

பாபர் மசூதி இடிக்கப்பட்டு 9 ஆண்டுகள் ஆகியும் இன்னும் உண்மைக் குற்றவாளிகளைக் கண்டு பிடிக்கவில்லைஎன்று காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டன.

அயோத்தியில் சுப்ரீம் கோர்ட் உத்தரவை பின்பற்றத் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு தவறிவிட்டது என்று கூறிகாங்கிரஸ், கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், சமாஜ்வாடி மற்றும் பி.எஸ்.பி. ஆகிய எதிர்க்கட்சிகள் தனித்தனியேஒத்திவைப்புத் தீர்மான அறிக்கையை சபாநாயகர் பாலயோகியிடம் அளிக்க முயன்றனர்.

அப்போது ஆளுங்கட்சி உறுப்பினர்கள் எழுந்து "ஜெய் ஸ்ரீ ராம்" என்று கோஷம் போட்டனர். ஆனால் சபாநாயகர்பாலயோகி, உறுப்பினர்கள் அனைவரையும் அமைதிகாக்கும்படி கேட்டுவிட்டு, கேள்வி நேரம் முடிந்த பிறகுஇந்தப் பிரச்சனை குறித்து விவாதிக்கலாம் என்றார்.

ஆனால் உறுப்பினர்கள் அனைவரும் கூச்சல் எழுப்பினர். இதையடுத்து மக்களவை இன்று முழுவதும்ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார்.

இதேபோல மாநிலங்களவையிலும், எதிர்க்கட்சிகளின் எழுப்பிய அமளியைத் தொடர்ந்து, அவைத் தலைவரும்துணை ஜனாதிபதியுமான கிருஷ்ணகாந்த், அவையை இன்று முழுவதும் ஒத்திவைப்பதாக அறிவித்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X