பாபர் மசூதி இடிப்பு தினம்: முஸ்லீம் அமைப்புகள் பேரணி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பாபர் மசூதி இடிப்பு தினமான இன்று (வியாழக்கிழமை) தமிழகத்தில் பல்வேறு முஸ்லீம் அமைப்புகள் அமைதிப்பேரணி நடத்தின. தமிழகம் முழுவதிலும் அமைதி நிலவுகிறது.

டிசம்பர் 6ம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டதன் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி தமிழகம்முழுவதிலும் தமிழக முஸ்லீம் முன்னேற்றக் கழகம் (தமுமுக) உள்ளிட்ட பல்வேறு முஸ்லீம் அமைப்புகள் சார்பில்அமைதி பேரணிகள், ஆர்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

சென்னையில் சுமார் 7,000 தமுமுக தொண்டர்கள் அமைதிப் பேரணி மேற்கொண்டனர். பேரணி முடிந்ததும்அவர்கள் பாபர் மசூதி இடிக்கப்பட்டதை எதிர்த்து கோஷங்கள் எழுப்பினர்.

மேலும் இச்சம்பவத்திற்குக் காரணமாக சங் பரிவார் தொண்டர்களைக் கைது செய்ய வேண்டும் என்றும் அந்தஇயக்கத்தையே தடை செய்ய வேண்டும் என்றும் தமுமுக தொண்டர்கள் கோஷங்களை எழுப்பினர்.

பின்னர் இதுகுறித்து ஜனாதிபதிக்குச் செல்ல வேண்டிய மனு ஒன்றை சென்னை கலெக்டர் அலுவலகத்தில் தமுமுகதொண்டர்கள் சமர்ப்பித்தனர்.

கோயம்புத்தூரில் 70 பெண்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான தமுமுக தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில்ஈடுபட்டனர்.

அயோத்தியில் பாபர் மசூதிக்கு அருகில் தற்போது நடந்துவரும் ராமர் கோவில் கட்டுமானப் பணிகளைஉடனடியாகத் தடுக்க வேண்டும் என்றும் மசூதியைத் திரும்பவும் கட்டித்தர வேண்டும் என்றும் தமுமுகதொண்டர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

பின்னர் இது தொடர்பான மனு ஒன்றையும் அவர்கள் கோயம்புத்தூர் கலெக்டரிடம் சமர்ப்பித்தனர்.

தமிழகத்தின் அனைத்துப் பகுதியிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதுவரை எந்தப்பகுதியிலும் அசம்பாவிதச் சம்பங்கள் நடந்ததாக போலீசாருக்குத் தகவல் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+