ஜெ.க்கு எதிராக பொது வேட்பாளர்: ராமதாஸ் யோசனை
சென்னை:
ஆண்டிப்பட்டி இடைத் தேர்தலில் ஜெயலலிதாவுக்கு எதிராக அனைத்துக் கட்சிகள் சார்பாக பொது வேட்பாளர்நிறுத்தப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் யோசனைதெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
பொடோ சட்டத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு முன்பு அனைத்துக் கட்சிகளின் ஆதரவைப் பெறவேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் பிரதமர் வாஜ்பாய்க்குக் கோரிக்கை விடுத்துள்ளேன்.
மலிவு விலை மதுவை தமிழகத்தில் அறிமுகப்படுத்த அதிமுக அரசு முடிவு செய்துள்ளது. பூரண மதுவிலக்கு என்றகொள்கையிலிருந்து அதிமுக அரசு தடம் புரண்டிருப்பதையே இது காட்டுகிறது.
மலிவு விலை மதுவை அறிமுகப்படுத்துவதன் மூலம் அந்த மலிவு விலை பாக்கெட்டுகளை விற்பனை செய்யப்போகும் ஆந்திராவுக்குத்தான் வருவாய் கிடைக்கும். மாறாக, தமிழ்நாட்டில் உள்ள பனை மற்றும் தென்னை மரம்மூலம் கள் இறக்கிப் பிழைக்கும் ஏழை மக்கள் பாதிக்கப்படுவார்கள்.
தமிழக அரசின் கட்டண உயர்வைக் கண்டித்து 3 கட்டமாக போராட்டத்தை நடத்த பாமக முடிவு செய்துள்ளது.
ஆண்டிப்பட்டியில் ஜெயலலிதாவை எதிர்த்து அனைத்து எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளர் நிறுத்தப்படவேண்டும்.
அப்போதுதான் எதிர்க்கட்சிகளின் வாக்குகள் சிதறாமல் இருக்கும். இதன் மூலம் ஜெயலலிதாவை தோற்கடிக்கமுடியும் என்றார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications