ரேஷன் அரிசி ரூ.3.50 க்கே கிடைக்கும்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ரேஷன் அரிசி வருகின்ற மே மாதம் வரை ரூ.3.50க்கே விற்கப்படும் என்றும் இது இன்று (வியாழக்கிழமை) முதல்அமலுக்கு வருகிறது என்றும் முதல்வர் பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
அரிசி விலை உயர்வினால் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் பாதிப்படையக்கூடாது என்பதால், தற்போதுஅதன் விலை குறைக்கப்பட்டுள்ளது.

கடந்த கருணாநிதி ஆட்சியில் குடும்ப அட்டைகள் வழங்குவதற்காக நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் பலகுளறுபடிகளும், முறைகேடுகளும் நடந்துள்ளன. இதனால் ஒரு லட்சத்திற்கும் மேல் வறுமைக்கோட்டிற்கு கீழ்உள்ளவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் இத்தகைய குடும்பங்களை இனம் கண்டு பிரிப்பதற்காக, தமிழக அரசு அடுத்த மாதம் 1ம் தேதி முதல்பிப்ரவரி 28ம் தேதி வரை கணக்கெடுப்பு நடத்த உள்ளது.

ஆண்டு வருமானம் ரூ.24,000 வரை சம்பளம் பெறுகின்ற குடும்பங்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள்என்றும், அதற்கு அதிகமாக சம்பளம் பெறுபவர்கள் வறுமைக்கோட்டிற்கு மேல் உள்ளவர்கள் என்று பிரிக்கப்படும்.

வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு பச்சை நிறம் கொண்ட குடும்ப அட்டைகளும், மற்றவர்களுக்குநீல நிறம் கொண்ட குடும்ப அட்டைகளும் வழங்கப்படும்.

குடும்ப அட்டைகள் வழங்கப்படும் பணி அடுத்த ஆண்டு மார்ச் 1ம் தேதி தொடங்கி ஏப்ரல் 30ம் தேதிக்குள்முடிவடையும்.

அதுவரை ரேஷன் கடைகளில் அரிசி விலை ரூ.3.50ஆகவே இருக்கும் என்றார் பன்னீர்செல்வம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+