நாளை பந்த்: தமிழகம் முழுவதும் பாதுகாப்பு தீவிரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

எதிர்க்கட்சிகள் நாளை நடத்தவுள்ள பந்த் காரணமாக தமிழகம் முழுவதும் அசம்பாவிதம் எதுவும் நடைபெறாமல்தடுக்க பலத்த பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது என்று தமிழக போலீஸ் டி.ஜி.பியான பி.பி. நெய்ல்வால் கூறினார்.

இதுகுறித்து தமிழக காவல்துறைத் தலைவர் நெய்ல்வால் இன்று சென்னையில் நிருபர்களிடம் கூறுகையில்,

எதிர்க்கட்சிகள் நாளை பந்த் நடத்தத் திட்டமிட்டுள்ளன.

அப்போது யாரும் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில், பேருந்துகள், பால் வண்டிகள், தண்ணீர்லாரிகள் போன்றவற்றை நிறுத்துதல், கடைகளை மூடச்சொல்லி வற்புறுத்துதல் போன்றவற்றில் யாரும் ஈடுபடக்கூடாது.

அவ்வாறு ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் பாபர் மசூதி இடிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஐக்கிய ஜமாத் பேரவை உள்ளிட்ட சில முஸ்லீம்அமைப்புகளுக்கு இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அப்போது அசம்பாவிதம்எதுவும் நடைபெறாமல் தடுக்கப் பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.

பாபர் மசூதி இடிப்புக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் வன்முறையில் ஈடுபடுவோர் மீது கடுமையானநடவடிக்கை எடுக்கப்படும்.

இன்றும் நாளையும், அசம்பாவிதம் எதுவும் நடைபெறாமல் தடுக்க தமிழகம் முழுவதும் பலத்த போலீஸ்பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது என்றார்.

சென்னையில் மட்டும் பாதுகாப்புக்காக 12,000 போலீசார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றும்பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் முயற்சியில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்என்றும் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் முத்துக்கருப்பன் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+