வியாபாரிகள் சங்கப் பேரவை பந்த்தைப் புறக்கணிக்க முடிவு
சென்னை:
விலைவாசி உயர்வைக் கண்டித்து நாளை எதிர்க்கட்சிகள் நடத்தவிருக்கும் பந்த்தில் தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப்பேரவை பங்கேற்காது என்று அச்சங்கம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து நேற்று (புதன்கிழமை) சென்னையில் அச்சங்கத்தின் தலைவர் தனபாலன் மற்றும் அமைப்பாளர்முத்துக்குமார் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழக அரசுக்கு ஏற்பட்டுள்ள கடுமையான நிதிநெருக்கடியைச் சமாளிக்க தமிழக அரசு எடுத்துள்ள சீர்திருத்தநடவடிக்கைகளை எதிர்த்து, எதிர்க்கட்சிகள் 7ம் தேதி பந்த் நடத்தப் போவதாக அறிவித்துள்ளன. இந்த பந்த்தில்தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவை கலந்துகொள்ளாது.
தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள நிதிப்பற்றாக்குறையைப் புரிந்துகொண்டு மத்திய அரசு உதவ முன் வந்தால், அதைமக்களோடு மக்களாக இருந்து நாங்களும் வரவேற்போம். ஆனால், அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு நடத்தப்படும்இந்த பந்திற்கு நாங்கள் ஆதரவு தரமாட்டோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications