சந்திரிகா மாபெரும் தோல்வி
கொழும்பு:
இலங்கையில் கடந்த 7 ஆண்டுகளாக பெரும் பலத்துடன் ஆட்சியில் இருந்து வந்த சந்திரிகா குமாரதுங்காவுக்குமிகப் பெரிய அரசியல் அடி விழுந்துள்ளது.
225 பேர் கொண்ட நாடாளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு தனி மெஜாரிட்டி கிடைத்துவிடும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது. மெஜாரிட்டி கிடைக்காவிட்டால் தமிழர் கட்சிகளின் ஆதரவுடன் ஐக்கிய தேசியக் கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்கே ஆட்சி அமைப்பார்.
ரணில் விக்கிரமசிங்கேக்கு கிடைத்துள்ள பெரிய அளவிலான தேர்தல் வெற்றி இது தான்.
சந்திரிகா இதற்கு முன் 2 அதிபர் தேர்தல்களில் வென்றுள்ளார். 2 நாடாளுமன்றத் தேர்தல்களிலும் வெற்றிபெற்றுள்ளார். பல உள்ளாட்சி, மகாணத் தேர்தல்களிலும் வெற்றி பெற்று வந்தார். ஆனால், இந்த நாடாளுமன்றத்தேர்தலில் மிகப் பெரிய தோல்வியடைந்துள்ளார்.
விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை, சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்தது, புலிகளுடன் தொடர்ந்து மோதல்போக்கு, இதனால் நாட்டில் அமைதி சீர்குலைந்தது, பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மந்தம் ஆகியவையே இந்தத்தோல்விக்குக் காரணமாகக் கருதப்படுகின்றன.