For Daily Alerts
Just In
கட்டண உயர்வை முழுமையாக விலக்க வைகோ கோரிக்கை
சென்னை:
தமிழக அரசு அறிவித்துள்ள கட்டண உயர்வை முழுமையாக விலக்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர்வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக இன்று (வியாழக்கிழமை) அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கட்டண உயர்வை ஓரளவு குறைத்ததன் மூலம் மக்களை ஏமாற்ற முடியாது. ஒட்டகத்தின் முதுகில் ஏராளமானசரக்குகளை ஏற்றிவிட்டு, பின்னர் சிறு துரும்புகளை மட்டும் கீழே இறக்குவது போலத்தான் இதுவும் உள்ளது.எனவே இது வெறும் கண் துடைப்பே ஆகும்.
எனவே கட்டண உயர்வு முழுமையாக விலக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம்முழுவதிலும் மதிமுக சார்பில் வரும் 11ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் நான் கலந்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார் வைகோ.
Comments
Story first published: Thursday, May 24, 2001, 5:30 [IST]