45 பஸ்கள் உடைப்பு: மதுரையில் பஸ் எரிப்பு
சென்னை:
தமிழகத்தில் நடந்து வரும் பந்த்தையொட்டி பல்வேறு இடங்களில் பஸ்கள் மீது கல்வீச்சுத் தாக்குதல் நடந்தது.
பிற்பகல் வரை சுமார் 45 பஸ்கள் உடைக்கப்பட்டன. சேலம், சிதம்பரம், பண்ருட்டி, வேலூர் ஆகிய இடங்களில்தான் பெரும்பாலான பஸ்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.
ஆனால், தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் அரசு பஸ்கள் வழக்கம்போல் இயங்கின. தனியார் பஸ்கள் தான்ரெளடிகளின் தாக்குதலுக்கு உள்ளாகலாம் என்பதால் இயக்கப்படவில்லை.
மதுரையில் நகைக்கடை பஜார், டவுன்ஹால் ரோடு ஆகிய இடங்களில் சமூக விரோதிகளுக்கு தாக்குதலுக்கு அஞ்சிமூடப்பட்டிருந்தன. ஆனால், பிற பகுதிகளில் கடைகள் வழக்கம்போல் திறந்திருந்தன.
மதுரை அண்ணா நகரில் ஒரு பஸ்சின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதில் அந்த பஸ் தீப் பிடித்து எரிந்தது.பல இருக்கைகளில் தீ பிடித்தது. இதையடுத்து அதில் இருந்த பயணிகள் பயந்து இறங்கி ஓடினர். உடனடியாக தீஅணைக்கப்பட்டுவிட்டது. ஆனாலும் இச் சம்பவத்தால் அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது.
நெய்வேலி சுரங்கத்தில் திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிக்குச்செல்லவில்லை. இதனால் நிலக்கரி வெட்டி எடுப்பது பாதிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கையில் முன்னாள் அமைச்சர் த.கிருஷ்ணன் தலைமையில் போராட்டம் நடந்தது. இதையடுத்து அவர் கைதுசெய்யப்பட்டார். அதே போல முன்னாள் அமைச்சர் பொன்முடி தலைமையில் பெரும் எண்ணிக்கையிலானதிமுகவினர் போராட்டம் நடத்தி கைதாகினர்.












Click it and Unblock the Notifications