For Daily Alerts
Just In
சொத்துக் குவிப்பு: ஜெ. மீதான வழக்கை விசாரிக்க இடைக்காலத் தடை
சென்னை:
வருமானத்திற்கு மீறிய வகையில் சொத்து சேர்த்ததாக ஜெயலலிதா மீது தொடரப்பட்ட வழக்கை தனி நீதிமன்றம் விசாரிக்க சென்னைஉயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீது இந்த வழக்குத் தொடரப்பட்டுள்ளது. நீதிபதி ஆறுமுகப் பெருமாள் ஆதித்தன்முன்னிலையில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.
வழக்கு தொடர்பாக விசாரிக்கப்பட்ட 22 சாட்சிகளையும் மீண்டும் விசாரிக்க கோரி சசிகலா மனுத்தாக்கல் செய்திருந்தார். ஆனால் 7சாட்சிகளை மட்டும் மீண்டும் விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்தார். இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சசிகலா மனு செய்தார்.
இதை விசாரித்த நீதிபதி மலை சுப்ரமணியம், வரும் செவ்வாய்க்கிழமை வரை இந்த வழக்கில் சாட்சிகளை விசாரிக்க தடை விதித்தார்.
மேலும், லஞ்ச ஒழிப்புப் போலீஸாருக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டார்.
Comments
Story first published: Wednesday, May 1, 2002, 5:30 [IST]