திமுக-அதிமுகவினர் மோதல்
சென்னை:
பூட்டியிருக்கும் கடைகளைத் திறக்க வேண்டும் என்று அதிமுகவினரும், திறந்திருக்கும் கடைகளைப் பூட்டவேண்டும் என்று திமுகவினரும் வற்புறுத்தியதன் காரணமாக பல இடங்களில் இவ்விரு கட்சியினரிடையே பெரும்மோதல் ஏற்பட்டது.
கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பூட்டிக் கிடந்த கடைகளைத் திறக்குமாறு அதிமுகவினர் கடைஉரிமையாளர்களைக் கேட்டுக் கொண்டனர்.
ஆனால் அப்பகுதியில் இருந்த திமுகவினர் கடைகளைத் திறக்கவிட மறுத்தனர். இதனால் அதிமுகவினருக்கும்திமுகவினருக்குமிடையே மோதல் ஏற்பட்டது.
இதேபோல் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இவ்வாறு இரு கட்சிகளுக்குமிடையே மோதல்கள் ஏற்பட்டதாகத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்னும் சில இடங்களில் திறக்கப்பட்டிருந்த கடைகளை மூடவேண்டும் என்று திமுகவினர் வற்புறுத்தவே,அதிமுகவினர் அதைத் தடுத்துள்ளனர். இதனாலும் இரு கட்சியினருக்குமிடையே மோதல்கள் நடந்துள்ளன.