போலீசாரில் கற்பழிக்கப்பட்ட ரீட்டா மேரிக்கு தமிழக அரசு ரூ.5 லட்சம் நஷ்ட ஈடு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

செஞ்சி கிளைச் சிறையில் போலீசாரால் கற்பழிக்கப்பட்ட இளம் பெண் ரீட்டா மேரிக்கு தமிழக அரசு ரூ.5 லட்சம்நஷ்ட ஈடு கொடுக்கிறது.

சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த ரீட்டா மேரி என்ற 20 வயது இளம் பெண் விபச்சார வழக்கில் கைதுசெய்யப்பட்டு செஞ்சி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

அவரை அங்கிருந்த காவலர்கள் கற்பழித்ததாக புகார் எழுந்ததையடுத்து 2 வக்கீல்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து விசாரணைக்கு உத்தரவிடக் கோரினர்.

பின்னர் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி ஐ.ஜி. திலகவதி இதுகுறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தார்.இதையடுத்து இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரிக்க நீதிபதி தினகர் உத்தரவிட்டார்.

சி.பி.சி.ஐ.டி. போலீஸார் மேற்கொண்ட விசாரணையின் இறுதியில் செஞ்சி கிளைச் சிறையைச் சேர்ந்த வார்டன்கள்லாசரஸ், அன்பழகன், சேகர், ஜெயபால் மற்றும் ஆத்தூர் போலீஸ் கான்ஸ்டபிள் முருகேஷ், விபச்சார புரோக்கர்ஆனந்த் ஆகியோர் கைது செய்யப்பட்டு, தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தமிழக உள்துறைச் செயலாளர் நரேஷ் குப்தா இன்று சென்னையில் நிருபர்களிடம் கூறுகையில்,இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ரீட்டா மேரிக்கு தமிழக அரசு ரூ.5 லட்சம் நஷ்ட ஈடாகக் கொடுக்கும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+