முல்லைப் பெரியாறு அணை: மத்திய-தமிழக அரசுகளுக்கு கேரளா கோரிக்கை
திருவனந்தபுரம்:
முல்லைப் பெரியாறு அணையை உயர்த்தும் முயற்சியில் ஈடுபடக் கூடாது என்று மத்திய அரசையும் தமிழகஅரசையும் கேரள அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
கேரள சட்டசபையில் இதுகுறித்த தீர்மானம் இன்று (வெள்ளிக்கிழமை) கொண்டுவரப்பட்டது.
கேரள பாசனத்துறை அமைச்சர் டி.எம். ஜேக்கப் இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வந்தார். தற்போதுள்ள 136அடிக்கு மேல் இந்த அணையை உயர்த்தினால் எவ்வளவு ஆபத்து ஏற்படும் என்பதையும் எவ்வளவு உயிர்ச் சேதம்ஏற்படும் என்பதையும் எடுத்துக் கூறினார்.
அந்தக் காலப் பொருட்களைக் கொண்டு 100 வருடங்களுக்கு முன் அந்த அணை கட்டப்பட்டுள்ளதால்,தற்போதுள்ள உயரத்தைக் கூட்டினால் நிலநடுக்கம் ஏற்படுவதற்குக் கூட வாய்ப்புள்ளது என்றும் ஜேக்கப் கூறினார்.
அணையை உயர்த்திக் கட்டுவதால் இடுக்கி, கோட்டயம், எர்ணாகுளம் மாவட்டங்களைச் சேர்ந்த கேரள மக்களுக்குஏற்படும் பாதிப்பு பற்றி ஏற்கனவே மத்திய அரசின் கண்காணிப்புக் குழு அளித்த அறிக்கையின் விவரத்தையும்அமைச்சர் சுட்டிக் காட்டினார்.
இதனால் மத்திய மற்றும் தமிழக அரசுகள் இந்த அணையை உயர்த்த வேண்டிய நடவடிக்கைள் குறித்து முயற்சிமேற்கொள்ளக் கூடாது என்று வேண்டுகோள் விடுத்து கேரள சட்டசபையில் தீர்மானம் இயற்றப்பட்டது.
இதுகுறித்து கேரள முதல்வர் ஏ.கே. அந்தோணி கூறுகையில், இந்தத் தீர்மானம் கேரள மக்களின் பாதுகாப்பைக்கருத்தில் கொண்டு இயற்றப்பட்டதே தவிர தமிழக அரசுக்கு எதிரானது அல்ல என்று கூறினார்.