நக்கீரன் கோபால் முன் ஜாமீன் கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு
சென்னை:
கர்நாடகப் போலீசாரால் தான் கைது செய்யப்படலாம் என்று கருதி நக்கீரன் ஆசிரியர் கோபால் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு மீதான தீர்ப்பு மறு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.
கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்ட வழக்கில் தாளவாடி போலீசார் தன்னைக் கைது செய்து சித்திரவதைசெய்வார்கள் என்று தான் அஞ்சுவதாகக் கூறி, தனக்கு முன் ஜாமீன் அளிக்க வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார் கோபால்.
இம்மனு இன்று (வெள்ளிக்கிழமை) வி. கனகராஜ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
விசாரணையின்போது, நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகளின் பெயர்ப்பட்டியலில் கோபால் பெயர் இன்னும் இடம் பெறவில்லை என்று அரசு தரப்பில் கூறப்பட்டது.
இதையடுத்து, இந்த முன் ஜாமீன் மனுவின் மீதான தீர்ப்பை மறு தேதி குறிப்பிடாமல் நீதிபதி கனகராஜ்ஒத்திவைத்தார்.












Click it and Unblock the Notifications