பந்த் முழு வெற்றி: கருணாநிதி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பந்த் முழு வெற்றி பெற்றுள்ளதாக திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
சென்னையில் அறிவாலயத்தில் நிருபர்களிடம் பேசிய கருணாநிதி, நாங்கள் பந்த் அறிவித்த உடனேயே விலையைஅரசு குறைத்தது. இது தான் எங்களுக்குக் கிடைத்த முதல் வெற்றி.
இன்றைய பந்துக்கு மக்கள் பெரும் ஆதரித்து வருகின்றனர். அமைதியாக, முழு அளவில் பந்த் நடந்து வருகிறது.சிவகங்கை, விழுப்புரம், திருச்சி, கும்பகோணத்தில் திமுக முன்னாள் அமைச்சர்கள் கைதாகியுள்ளனர்.ஆயிரக்கணக்கான திமுக, மார்க்சிஸ்ட், த.மா.கா., காங்கிரஸ் தொண்டர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காஞ்சிபுரத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் கவுன்சிலர் தாக்கப்பட்டுள்ளார்.
முழு அளவில் இந்த பந்த் வெற்றி பெற்றுள்ளது என்றார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications