முத்தமிட வந்தவரின் நாக்கைக் கடித்துத் துப்பிய இளம் பெண்
கோயம்புத்தூர்:
முத்தமிட வந்தவரின் நாக்கைக் கடித்துத் துப்பி விட்டு கூலாக சென்றார் இளம் பெண். கோயம்புத்தூரில்இச்சம்பவம் நடந்துள்ளது.
கோயம்புத்தூர் புறநகர்ப் பகுதியான துடியலூரைச் சேர்ந்த ஒரு இளம் பெண்ணை, அதே பகுதியைச் சேர்ந்தவாலிபர் ஒருவர் சமீப காலமாக அடிக்கடி பின் தொடர்ந்து சென்று கேலியும், கிண்டலும் செய்துள்ளார்.
ஆனால் அதை அந்தப் பெண்ணோ இவரை சட்டை செய்யவே இல்லை.
இந்த நிலையில் அந்தப் பெண் நேற்று (வியாழக்கிழமை) இரவு பணி முடிந்து வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தார்.
அப்போது பின் தொடர்ந்து வந்த அந்த வாலிபர், திடீரென்று அப்பெண்ணைக் கட்டி அணைத்து வாயில் முத்தமிடமுயன்றார்.
வாலிபரின் பிடியிலிருந்து விடுபட முயன்று தோற்ற அந்தப் பெண், வேறு வழியில்லாமல், வாலிபன் நாக்கைபலமாக கடித்தார்.
அதிர்ச்சியிலும், வலியிலும் துடித்த அந்த வாலிபர் உடனே அந்தப் பெண்ணை விட்டு விட்டு கதறினார். அந்தப்பெண்ணோ கடித்த நாக்கை கீழே போட்டு விட்டு சென்று விட்டார்.
நாக்கைப் பறிகொடுத்த அந்த வாலிபர் துடியலூரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார்.












Click it and Unblock the Notifications